பொள்ளாச்சி அருகே தாத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த தந்தையும் மகனும் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்

பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை ஆகியவற்றை வாங்கிவந்து கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் இருப்பது தெரியவந்தது.



இருவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை உள்ளிட்டவை கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட தந்தை முகம்மது சஹாப்தின் மற்றும் அவரது மகன் ஆரிப் ராஜா ஆகிய இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஆனைமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகம்மது சஹாப்தின் மீது கோவை கா.கா., சாவடி காவல்நிலையதில் 2007ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...