மத்திய சிறையில் 50 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
கோவை: கோவை மத்திய சிறையில் 50 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.