கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி

கோவை மாவட்டத்தில் கடும் வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மே 10 அன்று ஆரம்பித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மழை வரும் என எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இருந்த போதிலும், கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் நிலவியது.



இந்த நிலையில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மே 10 அன்று வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்தத் தொட்டியில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனவிலங்குகளின் தாகம் தணியும். மேலும், கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...