உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நம்பிக்கை

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் மேம்பாலம் திட்டம் அறிவிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக உக்கடத்தில் இருந்து கரும்புகடை வரை இணைப்பு இருந்தது. மேம்பாலம் திட்டத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளுடன் இணைக்கப்பட்டு கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கப்பட்டது.

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் 92% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாலைகளில் ஏற்கனவே விரிசல் காணப்பட்ட நிலையில், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் அண்மையில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள் வருகையின் போது ஆத்துப்பாலத்தை செல்வபுரம் புறவழிச்சாலையுடன் இணைக்கும் சாலையின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோயம்புத்தூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அவரது குழுவினரால் இப்பிரச்னையை சரி செய்ய ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...