வங்கி மேலாளர் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை துளசியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இவரும், இவரது மனைவியும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சுரபி அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் பணி நிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் துறைக்கு வங்கி அதிகாரி ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்க்கு  வந்த காவல் துறையினர் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் ஏதேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...