உடுமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது

தாத்தா பாட்டியுடன் வசித்த வந்த 17வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடன் உடுமலை பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு நபர்கள் பாலியல் தொடர்பில் இருந்து உள்ளனர். இதில் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பாட்டி விசாரித்த போது, இது குறித்து சிறுமி தெரிவித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் காளீஸ்வரன்(19), மதன்குமார்(19), பரணிகுமார்(21), பிரகாஷ்(24), நந்தகோபால்(19), பவா பாரதி(22) மற்றும் 14,15,16 ஆகிய வயது சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...