பொள்ளாச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு தினங்களாகவே வெயிலின் தாக்கம் மாறி மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் பொள்ளாச்சி நகரமே இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.



சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்லடம் சாலை, பொள்ளாச்சி உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். மேலும் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த கோடை மழையானது தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...