கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக் பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக இன்று மே.13 கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், செல்லப்பாளையம் பிரிவு அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் ராஜசேகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுல்தான்மொய்தீன் மகன் மாலிக் பாஷா ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் ராஜசேகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுல்தான்மொய்தீன் மகன் மாலிக் பாஷா ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.