கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2017-க்காக நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்வு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்டத் தேர்தல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதியன்று கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துரைகள் ஆகியவை பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதியன்று (நாளை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வெளியிடப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துரைகள் ஆகியவை பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதியன்று (நாளை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வெளியிடப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.