தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சுமார் 210 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகின்றன.



தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில் குமார், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 184 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வாகன ஓட்டுனர்களின் (டிரைவிங் லைசென்ஸ்) ஓட்டுனர் உரிமம் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது.



அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். இன்று நடைபெற்ற ஆய்வில் 3 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது என வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...