மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் (30-06-2024)-க்குள் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் படி இன்று (மே.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID. unique Disability ID Card)-க்கு பெற்றிட மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது மாற்றுத்திறனாளிகள் நேரில் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் (30-06-2024)-க்குள் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்-0422- 2380382 ல் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்-0422- 2380382 ல் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.