காசிக்கு அழைத்துச் செல்வதாக 2 ஆயிரம் பேரிடம் மோசடி: 70 லட்சம் ரூபாயை மீட்டு தர வேண்டி பாதிக்கப்படவர்கள் புகார்

காசி, கயா உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு யாத்திரை அழைத்து செல்வதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசம் என்கிற சிவருத்திரன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் சிவா பக்தர்களை யாத்திரை அழைத்து செல்லும் சிவன் படை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 

இந்த ஆண்டு மே மாதம் சிவபெருமானின் திருத்தலங்களாக கூறப்படும் காசி, கயா, ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல இருப்பதாக சிவபக்தர்களிடம் கூறியுள்ளார். 

இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஜோசப்-யிடம் முன்பணம் கொடுத்துள்ளனர்.  ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்கிய ஜோசப் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து, ஜோசப் என்ற சிவருத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...