காசி, கயா உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு யாத்திரை அழைத்து செல்வதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசம் என்கிற சிவருத்திரன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் சிவா பக்தர்களை யாத்திரை அழைத்து செல்லும் சிவன் படை என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இந்த ஆண்டு மே மாதம் சிவபெருமானின் திருத்தலங்களாக கூறப்படும் காசி, கயா, ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல இருப்பதாக சிவபக்தர்களிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஜோசப்-யிடம் முன்பணம் கொடுத்துள்ளனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்கிய ஜோசப் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து, ஜோசப் என்ற சிவருத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசம் என்கிற சிவருத்திரன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் சிவா பக்தர்களை யாத்திரை அழைத்து செல்லும் சிவன் படை என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இந்த ஆண்டு மே மாதம் சிவபெருமானின் திருத்தலங்களாக கூறப்படும் காசி, கயா, ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல இருப்பதாக சிவபக்தர்களிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஜோசப்-யிடம் முன்பணம் கொடுத்துள்ளனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்கிய ஜோசப் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து, ஜோசப் என்ற சிவருத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.