ஓடையகுளம் பகுதியில் சூறை காற்றில் வாழை மரங்கள் சேதம் - அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில் இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஓடையகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, இந்த பகுதியில் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்பித்த பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து அதிகாரிகளுடன் பேசி இன்சூரன்ஸ் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஆனைமலை உப்பாற்றங் கரையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ள ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.



இதில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளார்கள், தேவ சேனாதிபதி, யுவராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...