கோடை விடுமுறையைத் தொடர்ந்து, மங்களூரு மற்றும் கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் மே 18 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Coimbatore:
சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.