கோடை மழைக்காக காத்திருந்த கோவை மக்களை கூலாக்கியது ஆலங்கட்டி மழை.
கோவையில் வழக்கம்போல இன்றும் வெயில் சுட்டெரித்தது. வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தத நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் பல இடங்களில் மழை பெய்தது.
மழை வருவதற்கான எந்த அறிகுறிகளும் இன்றி பெய்த இந்த திடீர் மழையால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், ராமநாதபுரம், சரவணம்பட்டி, சேரன்மாநகர், காளப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மழைத்துளிகள் கட்டிகளாக விழுவதை கண்ட மக்கள் அதை கையில் ஏந்தி விளையாடி மகிழ்ந்தனர்.