வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலை 11 மணியளவில் கோவை கணபதியில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவன் மரணம் அடைந்தார்.
கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக பதவி வகித்து வந்தவர் தா.மலரவன். இவர் 2001–2006 காலகட்டத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயராக இருந்தார்.
2006 முதல் 2016 வரை 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். எம்.ஜி.ஆர். 1972-ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததில் இருந்து கட்சியில் பணியாற்றினார்.எம்.ஜி.ஆர். மீதான பாசத்தால் அவருக்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் கட்சி பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்களை காப்பாற்ற தீபாவால் மட்டுமே முடியும். அதனால் தீபாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்து விட்டேன் என்று கூறி இருந்தார்.
பின்னர் மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் தா.மலரவன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று (17-05-2024) காலை 11 மணியளவில் கணபதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.