கோவை நவ இந்தியா ஜங்சன் அருகே கல்லூரி மாணவனின் காரில் இருந்த செல்போன் மற்றும் பணம் திருட்டு

காரை உரசிவிட்டு பின்னர் வாக்குவாதம் செய்து, காரின் முன் இருக்கையில் இருந்த செல்போன் மற்றும் 700 ரூபாய் பணத்தை பைக்கில் வந்த நபர் திருடிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பாலகார்த்திக் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மே.16 பாலகார்த்திக் பீளமேட்டில் உள்ள ஒரு கடைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அவர் நவ இந்தியா ஜங்சன் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் கார் மீது உரசியது. இதில் பாலகார்த்திக்கிற்கும், பைக்கில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனையடுத்து காரில் முன் இருக்கையில் வைத்திருந்த பாலகார்த்திக்கின் செல்போன் மற்றும் ரூ.700 காணவில்லை. பைக்கில் வந்த நபர் திருடி சென்றதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து பாலகார்த்திக் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...