தாராபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம்பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் லேசாக பெய்ய துவங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.



இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் என்பதால் தங்களது பணியை முடித்துவிட்டு வரும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். மாலை வேலை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



இந்த மழை காரணமாக மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.



தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அமராவதி ரவுண்டானா பகுதி, பொள்ளாச்சி சாலை, பூக்கடைக்காரனர், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...