தாராபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம்பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் லேசாக பெய்ய துவங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.



இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் என்பதால் தங்களது பணியை முடித்துவிட்டு வரும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். மாலை வேலை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



இந்த மழை காரணமாக மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.



தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அமராவதி ரவுண்டானா பகுதி, பொள்ளாச்சி சாலை, பூக்கடைக்காரனர், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...