சமுதாய முன்னேற்றத்திற்கும், மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிவர்களுக்கான ஐந்தமிழ் சாதனையாளர் விருதுகள்


கோவை சுழற்சங்கம் சார்பில் ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர், பால் ஹரிஸ் ஹாலில் நேற்று  மாலை 7 மணியளவில் நடைபெற்றது. விழாவினை கோவை சுழற்சங்கம் தலைவர் குருதீப் சிங் தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை சுழற்சங்கம் துணை ஆளுநர்  மாரப்பன் கலந்து கொண்டார்.



பின்னர், கோவை சுழற்சங்கம் சார்பாக இந்த ஆண்டு சமுதாய முன்னேற்றத்திற்க்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பணியாற்றி வருகின்ற ஐந்து சாதனையாளர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கும் வகையில் இயல், இசை, நாடகம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது. 



அதில், இசைத்தமிழ் மாமணி விருது ஸ்வர்ணா சோமசுந்தரத்திற்கும், நாடகத் தமிழ் மணி விருது குமரேசனுக்கும், ஆன்மீகத் தமிழ் மாமணி விருது மருதாச்சலாம் அடிகளாருக்கும், அறிவியல் தமிழ் மாமணி விருது மோகனுக்கும், இயற்றமிழ் மணி விருது கோவை கோகுலம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.



பின்னர், விழாவில் பேசிய சிந்தனைக் கவிஞர் கவிதாசன்; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்புள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பு நமது தமிழ் மொழியும், கலாச்சாரமும் தான். எனவே அடுத்த தலைமுறைக்கு இந்த தமிழையும், கவிதையும், கலாச்சாரத்தையும் எடுத்து சொல்லும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடியவர்களை கண்டு ஆச்சரியப்படுவார்கள். ஆகவே, நாம் தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்க்காமல் கலாச்சாரமாக பார்த்து அந்த தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கோவை சுழற்சங்கம் ஆண்டுதோறும் ஐந்தமிழ் விருதுகள் வழங்க உறுதியளித்துள்ளது. 



அன்று முத்தமிழ் விருந்தாக இயல், இசை, நாடகத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இன்று ஐந்தமிழ் விருந்தாக ஆன்மிகம் மற்றும் அறிவியலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியலில் தேடல் இல்லாமல் போனால் நாம் தொலைந்து போய்விடுகிறோம். ஆன்மீகத்தில் தேடித் தேடி தொலைந்து கரைந்து போய்விடுகிறோம் இதுவே அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வித்யாசம். எனவே, ஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும், அறிவியலை மற்றொரு கண்ணாகவும் வைத்து நாம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும். இதுபோன்ற ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் கோவை சுழற்ச் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.   

                 

விழாவில், கோவை சுழற்சங்கம் செயலாளர் ராம்குமார், கோவை சுழற்சங்கம் திட்டத் தலைவர் சித்ரா மனோகரன், கோவை சுழற்சங்க தொழில்முறை சேவை இயக்குநர் நாராயணன் குமார் மற்றும் கோவை சுழற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...