உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று இரவு பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிக்கட்டு, முத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் வெயில் அடித்த காரணத்தால் காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்பொழது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தீடீரென தடை விகித்தனர்.



மேலும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனே அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...