உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று இரவு பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிக்கட்டு, முத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் வெயில் அடித்த காரணத்தால் காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்பொழது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தீடீரென தடை விகித்தனர்.



மேலும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனே அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...