ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மற்றும் தி சென்னை சில்க்ஸ் இணைந்து நடத்தும் கஜானந்தா அறக்கட்டளை மூலம் சேலம், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான கோனியம்மன் கோவிலில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி நடைபெற்றது.

இதில், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 12 பணியாளர்கள் பங்கேற்று கோவில் முழுக்க தூய்மை செய்தனர்.
