டாஸ்மாக் கடை மூடலால் வேலையிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீதிமன்ற தீர்ப்பை தொடந்து தமிழகத்தில் 3339 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேளை இழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க கோரி மனு அளித்தனர்.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்குகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆனால் கடை சாவிகளை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்கமறுப்பதாகவும், இதனால் கடைகளில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...