உடுமலை அருகே தமிழக எல்லையில் தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு தீவிரம்

கேரள மாநிலம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.



அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கேரளா அரசு அமராவதி அணையின் பிரதான நீர் வரத்தான சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை துவக்கி உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி கேரளா அரசு அங்கு ஒரு தடுப்பணையை கட்டி வருகிறது.

இது குறித்து விசாரிக்கையில் அந்த பகுதியில் அமைய உள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கம்பெனிக்காக அந்த தடுப்பணை கட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்து நின்று விடக்கூடும். இதனால் அணையை ஆதாரமாகக் கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கி குடிநீர் பஞ்சமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு, கேரளா அரசுடன் போர்கால அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதுடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணியையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமராவதி பாசன விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...