நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நாளையும் (மே.21) மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் இன்று மே.20 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக (மே.21) நாளையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் என இரு மார்க்கமாகவும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.