கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது.

இந்த தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. காலையில் நீா்வரத்து குறைந்து காணப்பட்ட கூழாங்கல் ஆற்றில் பிற்பகலில் நீா்வரத்து அதிகரித்தது.இதைத்தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன், காவல் துறை ஆய்வாளா் ஆனந்தகுமார் ஆகியோர் ஆற்றுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாகவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போது மே.21 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...