கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், கோவை மாநகராட்சி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள ஏழாவது குறுக்கு தெருவில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சார்பாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (மே.21) நடைபெற்றது.



இதில், பீளமேடு பகுதிக்கு சிமெண்ட் காங்கிரட், மழை நீர் வடிகால், மின்விளக்கு அமைக்கப்படும் என ஒப்பந்ததாரர் மூலமாக எழுத்து மூலம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், கோவை மாநகராட்சி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோவை மாநகராட்சி மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...