திமுக அரசின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிபிசிஐடி விசாரணை – கோவையில் பாஜக மாநில பொருளாளர் புகார்

சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னையில் இருந்து போலீசார் வந்து கேள்விகள் கேட்டனர், வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இல்லத்தில் இன்று சென்னையில் இருந்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ரூ.4 கோடி பணம் பிடிப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.



விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ரூ.4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க நேற்று சிபிசிஐடி சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை வர முடியாது என்றும், 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் சிபிசிஐடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டதை சிபிசிஐடி ஏற்றுக் கொண்டிருந்தனர்.

நான் வெளியூர் கிளம்பி கொண்டு இருந்த நேரத்தில் திடீரென சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க வந்தனர். அவர்களை வரவேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

தகவல் சொல்லாமல் பத்து நாள் அவகாசம் கேட்ட பின்னரும் கூட வந்தார்கள். சட்டபூர்வமாக அவர்கள் கேட்ட கேள்விக்கு மரியாதை கொடுத்து பதில் அளித்தேன். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல் துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு நாளை வந்துவிடும் அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பாஜக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. மடியில் கனம் இல்லை. ஆனால் திமுக அரசின் நோக்கம் துன்புறுத்துதல், பரபரப்பை ஏற்படுத்துவது.

சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னையில் இருந்து போலீசார் வந்து கேள்விகள் கேட்டார்கள். மேலும் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டது.

நேற்று பிற்பகல் ஒன்றே கால் மணிக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்று கிளம்பி கொண்டு இருந்த பொழுது போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர். சட்டத்துக்கு புறம்பாக எதிராக தகவல் தெரிவிக்காமல் வருகின்றனர். திமுக அரசின் நோக்கம் பாஜகவை கலங்கப்படுத்த வேண்டும் என்பது.

நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை சொல்லிவிட்டோம். உண்மையான தகவல்களை விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டோம். கடந்த ஒரு வாரமாக நான்கு கோடி ரூபாய் பாஜகவின் பணம் என தவறாக சித்தரித்து வருகின்றனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்கிறோம்.

உள்நோக்கம் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு காரணம் என்றும், திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. அது மிகப்பெரிய அளவில் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் தவறான புகாரை சொல்கின்றனர்

இன்று காலை 9 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீசார் 11 மணி வரை 2 மணி நேரம் விசரணை மேற்கொண்டனர். சென்னை சிபிசிஐடியில் இருந்து 6 பேர், உள்ளூரில் இருந்து 6 பேர் மற்றும் காவலர்கள் என 20-க்கு மேற்பட்ட போலீசார் 3 வாகனங்களில் வந்திருந்தனர் எனக் அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...