உலியம்பாளையத்தை அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருக்கும் ஞானசுந்தரம் என்பவரின் வீட்டின் ஓட்டை பிரித்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையத்தை அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் இவரது மனைவி, மகன் ஆகியோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.
நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று மே.21 காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன.
மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தது. வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு வீட்டில் மலம் கழித்து விட்டு மர்ம நபர் சென்றுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று மே.21 காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன.
மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தது. வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு வீட்டில் மலம் கழித்து விட்டு மர்ம நபர் சென்றுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.