மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை தொடக்கம். மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட சேவை, 4 நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால் கடந்த 18ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் இன்று (மே.22) மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் மலை ரயிலில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் இன்று (மே.22) மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் மலை ரயிலில் பயணம் செய்தனர்.