மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது - கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை

மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று மே.22 அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளிலிருந்து கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். கால்நடைகள் கட்டும் கொட்டகையினை நல்லமுறையில் பராமரித்து, சுகாதாரமான தண்ணீர் மற்றும் தீவனங்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள், தடுப்பூசிகள், தாதுஉப்புக் கலவை போதுமானளவு கையிருப்பில் உள்ளது. பருவ மழைக் காலங்களில் கால்நடை பாதுகாத்திடும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் மேற்படி சேவைகளை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தியும், மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுமாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...