கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வரும் ஒரு மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் வரும் ஒரு மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் போன்ற கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் போன்ற கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.