உடுமலை சிறுமிகள் பாலியல் வழக்கு - சிவா தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த சிவா தங்கும் விடுதிக்கு, உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஆறு வாலிபர்கள் உட்பட மூன்று சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு 14 வயது சிறுவர்கள், ஒரு 15 வயது சிறுவன் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு சிவா தங்கும் விடுதி மேனேஜர் சாமுவேல்(60) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



அத்துடன் போலீசாரும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் விடுதிக்கு வருகை தருகின்ற நபர்கள் குறித்து முறையாக விசாரணை செய்யாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் தங்குவதற்கு அனுமதி அளித்து சட்டவிரோத செயலுக்கு உறுதுணையாக இருந்ததாக வரப்பட்ட, காவல்துறை மற்றும் வருவாய் துறை அறிக்கையின் அடிப்படையில் தங்கும் விதியை மூடி சீல் வைக்க உடுமலை தாசில்தார் ப. சுந்தரம் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...