உடுமலை அருகே சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தடுப்பணையால் பாதிப்பு இல்லை என்று கூறுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதை கண்டிக்கின்றோம். இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், 120 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் ஒரு டி.எம்.சி தண்ணீர் தான் எடுக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். பழைய மற்றும் புதிய ஆயகட்டுப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அறிக்கை அளித்து உள்ளனர். அதிகாரிகளின் பதிலானது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற நிகழ்வாகும். தடுப்பணை கட்டும் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கேரள மாநில சோதனை சாவடிகளில் தடுக்கின்றனர்.



சட்டவிரோதமாக அணை கட்டுவதால் தான் ஆய்வு செய்ய மறுக்கின்றனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாததும் தெரியவருகிறது. தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் அங்குள்ள மரங்களை காப்பாற்றவும் தடுப்பணை கட்டி வருகின்றனர். இதனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

மேலும் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்டுவதை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படுவதுடன் தமிழகத்தில் இருந்து உடுமலை வழியாக கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், இறைச்சி, போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...