தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

முன் விரோதம் காரணமாக தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலராக இருந்தவர் கிருஷ்ணசாமி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் என்பவர் இந்து அறநிலைய துறையில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கிருஷ்ணசாமி அறங்காவலர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் தவறான புகார் அளித்ததோடு, வீண்வதந்தி பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.



தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் வானுகன் கூறும் போது, கடந்த 1995 ல் இருந்து அறங்காவலராக இருந்து வந்த கிருஷ்ணசாமி பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதே போல மதுக்கரை பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...