ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி மலர் - வால்பாறையில் மக்கள் பார்த்து வியப்பு

வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது வீட்டில் நேற்றிரவு நிஷா காந்தி பூ பூத்தது. நறுமணத்துடன் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துக்குலுங்கின. இந்த அழகிய காட்சியை அருகில் உள்ளவர்களும் வந்து பார்த்து ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பாபு என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகாந்தி பூ இரவில் பூத்துக் குலுங்கியது. பாபு என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் விஷாகாந்தி பூ பூக்கும் என்பதை கேள்விப்பட்டு தங்கள் வீட்டில் நிஷா காந்தி பூ பூக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.



இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் அழகான நறுமணத்துடன் பூ பூத்தது. முதலில் ஒரு சில பூக்கள் மெல்ல மெல்ல பூக்க துவங்கியது. பின் சுமார் 30ற்கு மேற்பட்ட பூக்கள் செடியில் பூத்துக் குலுங்கியது. இந்த பூ மிகவும் அழகாக தூய வெள்ளை நிறத்தில் உள்ளது.

நிஷாகந்திப் பூ இரவில் மலர்ந்து அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வாடிவிடும் தன்மை உடையது. இந்த வகை பூக்கள் இமயமலை பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

மேலும் இந்த பூ இலைகள் மருத்துவ குணம் உடையது. இந்த இந்த நிஷா காந்தி பூ வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் பூத்து குலுங்கியது வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் இந்தப் பூக்களை பார்த்து ரசித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...