ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு

கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கில் மற்றொரு நபராக ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வருகின்ற 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...