கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டின் கேட்டில் தலையை மாட்டிய நாய் பத்திரமாக மீட்பு

வண்ணார் கோவில் பகுதியில், வீட்டின் கேட்டில் தலையை மாட்டிக்கொண்டு போராடிய நாயை, அதன் கழுத்து பகுதியில் எண்ணெய்யை ஊற்றி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணார் கோவில் பகுதியில் வீட்டின் கேட்டில் தலை சிக்கி போராடிக்கொண்டிருந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரை மணி நேரம் போராடி கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி லாவகமாக மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணார் கோவில் என்ற இடத்தில் வீட்டின் கேட் ஒன்றில் நாய் ஒன்று தலை உள்ளே விட்டு மாட்டியிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் கார்த்திகேஷன், சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் நாயின் கண்களை துணி கொண்டு கட்டி, கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி அரை மணி நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.



அந்த நாயை மீட்கும் போது அருகே அதனுடைய நண்பன் நாய் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...