கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும் என்று கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநரிடம் மனு அளித்தனர்.


கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...