பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டியில் தொகுப்பு வீடுகளின் அவல நிலை: உயிருக்கு பயந்து வாழும் மக்கள்

பொள்ளாச்சி புளியங்கண்டி பகுதியில் 30 ஆண்டுக் காலம் விடியாத தொகுப்பு வீடுகளில் மலைவாழ் மக்கள் உயிருக்கு பயந்து வாழ்கின்றனர். இடிந்து விழும் கான்கிரீட் கம்பிகள் மற்றும் விரிசல் பாதிக்கப்பட்ட வீடுகளில் அவல நிலை.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மலையடிவாரத்தில் அமைந்துள்ள புளியங்கண்டி பகுதியில் பாரம்பரியமாக 40க்கும் மேற்பட்ட இரவாளர் இன பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

கூலித் தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வரும் இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பு வீடுகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருவதால் குடியிருக்க முடியாமல் குடும்பத்துடன் உயிருக்கு பயந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பருவ மலையின் போது பெரும்பாலான குடும்பங்கள் அருகில் உள்ள பள்ளி கட்டிடம் அல்லது அங்கன்வாடி கட்டிடத்தில் தங்க வைக்கும் சம்பவங்களும், அரங்கேறி வருகிறது.



இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் முறையாக அரசு பராமரிப்பு செய்யவில்லை தற்போது வீடுகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இரவு நேரங்களில் குடும்பத்துடன் நிம்மதியாக உறங்க முடியவில்லை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படும் சிமெண்ட் மேற்கூரை திட்டுகள் விழுந்து காயம் ஏற்படுவதோடு இரவு நேரங்களில் வெளியில உறங்க நினைத்தாலும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வருவதால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர் எனவே அச்சத்துடன் வாழ்ந்து வரும் எங்களது நிலைமையை அறிந்து அரசு வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...