கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை பிருந்தாவனம் சாலையில் நடந்து சென்றபோது மிரட்டி 500 ரூபாய் பறித்த ரங்கராஜ் கைது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவர் நேற்று முன்தினம் பிருந்தாவனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கார்த்திகேயனை கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் மே.24 புதுக்கோட்டையை சேர்ந்த ரங்கராஜ்(28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் மே.24 புதுக்கோட்டையை சேர்ந்த ரங்கராஜ்(28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.