உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கடும் எதிர்ப்பு - 200 பேர் கைது

உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கேரளா அரசுக்கு எதிர்ப்பு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம் நடத்தி 200 பேர் கைது. துரைமுருகன் பதவி நீக்க போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை ஒன்று கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



இதற்கிடையில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எனவே கேரளா அரசு உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதணை சுவாடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக கேரளா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்.

விவசாயிகள் கூறியதாவது

அமராவதி அணை முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்சமயம் தமிழகத்தில் அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரளா அரசு தற்பொழுது வரை எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு 5 மாதத்திற்கு முன்பே சிலந்தை மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தகவல் தெரிந்தும் அலட்சியமாக இருந்த காரணத்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தடுப்பணை கட்டும் இடத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக என தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...