கோவையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி - மாநகராட்சி ஆணையாளர் தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் அருகில் பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (27.05.2024) துவக்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து அவர் பேசியாதவது, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamilnadu Mission) திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், திறவிடங்கள், குளக்கரை நீர்வழித்தடங்களின் கரைகளில் என சுமார் 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 10123 வகைகளான மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்வின்போது, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...