கோவை எம்ஜிஆர் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவு – ஒரு கிலோ தக்காளி ரூ.55 விற்பனை

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டாமுத்தூர், நரசிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது.

கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது 120 டன் அளவிற்கு தக்காளி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூபாய் 1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோவையில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...