கோடை விடுமுறையையொட்டி கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையையொட்டி கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.