கோவையில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் சாலை வரை சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கரிமலை செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், மின் ஒயர்களை சரி செய்யவும் மற்றும் மழைக்காலங்களில் பூங்கா வளாகத்தில் தேங்கும் மழை நீரை முழுமையாக வெளியேற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்தியமண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலையில் மேட்டுப்பாளையம் சாலை முதல் தடாகம் சாலை வரை சுமார் 1.82 கி.மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை சீரமைக்கும் பணியினை ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை பொறியாளர் கருப்பசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்னவெங்கடேசன், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் சலைத், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், பர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...