கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

மதுக்கரையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வேத்பிரகாஷ் சோன்கர் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல், மலுமிச்சம்பட்டியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், இன்று மே.28 மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுக்கரை போலீசார், மதுக்கரை மார்க்கெட் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் பிச்சை பாண்டி(23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...