உக்கடம், பெரியகுளத்தில் சைரன் பொருத்திய ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு தீவிரம்

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் ண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சைரன் மற்றும் மைக் மூலம் ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


கோவை: மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், குறிச்சி குளம் உட்பட ஏழு குளங்கள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், நடைபாதை உள்ளிட்ட அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்குளக்கரைகளை பராமரிக்க, போதிய உபகரணங்கள் இல்லாததுடன், கண்காணிப்பும் இல்லாததால் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும், காதல் ஜோடிகளின் அத்துமீறல் காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது.

இதையடுத்து, சிறிய 'எலக்ட்ரிக்' ரோந்து வாகனம், நடைபாதை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு ரோந்து வாகனங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில், 1.5 அடி உயரத்தில் நின்றுகொண்டே சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை, கண்காணிக்க முடியும். சைரன், மைக் மூலம், ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...