கோவை ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்ஸில் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட கிளீனர் கைது

ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்லில் இருந்து பயணிகள் இறங்கிகொண்டிருந்தபோது, ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட ஆம்னி பேருந்தின் கிளீனர் சுபாஷ் சந்திர போசை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: விருதுநகர் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் கோவை நோக்கி வந்தது. பஸ்ஸில் சரவணம்பட்டி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஊழியரும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மே.29 காலை கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகில் ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கிளீனர் ஆக பணியாற்றி வரும் மாயவரம் மஞ்சில்குடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கிளீனர் சுபாஷ் சந்திரபோஸை கணவர் மற்றும் சக பயணிகள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இறங்க உதவி செய்வதற்காகத்தான் கையை நீட்டியதாக கூறினார். இதை ஏற்காத அவர்கள் அவரை சத்தம் போட்டனர். ஆனால் அவர்களை மிரட்டிய அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து ஐடி பெண் ஊழியர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஐயாசாமி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் கிளீனர் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...