உடுமலை அருகே பண்ணைக்கிணறு பகுதியில் மழை நீர் குட்டையில் மூழ்கி இரண்டு பள்ளி சிறுவர்கள் உயிரிழப்பு

பண்ணைக்கிணறு பகுதியில விளையாடச் சென்ற இரண்டு பள்ளிச் சிறுவர்கள் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சியில் நேற்று முன்தினம் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில் மூன்று சிறுவர்கள் வீடு திரும்பினர்.

மிதுன் ராஜ்(11) (5-ம் வகுப்பு மாணவன்) மற்றும் வினோத்(12) (6-ம் வகுப்பு மாணவன்) மட்டும் வீடு திரும்பாத நிலையில் பதற்றம் அடைந்து பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.



காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் இரண்டு சிறுவர்களின் புகைபடங்கள் அனுப்பி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் பண்ணை கிணறு அருகில் உள்ள மழை நீர் குட்டையில் இரண்டு சிறுவர்கள் உடல் மிதப்பதாக குடிமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் மழை நீர் குட்டையில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் காணாமல் போன சிறுவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே விளையாடச் சென்ற பள்ளி மாணவர்கள் மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...