கோவையிலிருந்து அமெரிக்கா, கனடாவிற்கு ஜூன் 2ம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். டெல்லியிலிருந்து கோவை வந்து சேர விமான சேவை வசதியும் உள்ளது.


கோவை: வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் கோவையிலிருந்து டில்லி மற்றும் மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள ஐந்து நகரங்களான நியூ ஆர்க் (New Ark), நியூயார்க் (New York), வாஷிங்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோவுக்கும், கனடாவில் உள்ள வான்குவார் மற்றும் டோராண்டோ ஆகிய நகரங்களுக்கும் டெல்லி மற்றும் மும்பை வழியாக கோவையிலிருந்து செல்ல முடியும்.

ஏர் இந்தியாவின் புதிய நான்-ஸ்டாப் கோவை-டெல்லி விமான சேவை, கோவையிலிருந்து (திங்கள் - வெள்ளி மற்றும் ஞாயிறுகளில்) மாலை 6.45 மாணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு டெல்லி வந்து சேரும்.









டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாகவே டெல்லி வர விமான சேவைகள் உள்ளது. பின்னர் டெல்லியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை வந்து சேரவும் விமான சேவை உள்ளது.

அதேபோல கோவையில் இருந்து மும்பை நகருக்கு தினசரி காலை 9 மணிக்கு விமான சேவை உண்டு. காலை 9 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு மும்பையில் தரை இறங்கும்.

மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் செல்ல முடியும். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் வழியாகவே மும்பை வரவும் முடியும்.

பின்னர் மும்பையில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு காலை 8.25 மணிக்கு கோவை வந்து சேர்ந்திடலாம். இதனால் இனி கோவையில் இருந்து 7 வெளிநாட்டு நகரங்களுக்கு எளிமையாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...